![யாருக்கும் கிடைக்காத குடுப்பணை ரஜினிக்கு கிடைச்சிருக்கு.., ரிஷிகேஷ் பயணத்தின் போது நடந்த சம்பவம்!! யாருக்கும் கிடைக்காத குடுப்பணை ரஜினிக்கு கிடைச்சிருக்கு.., ரிஷிகேஷ் பயணத்தின் போது நடந்த சம்பவம்!!](https://enewz.in/wp-content/uploads/2022/10/feature-image-1-3-768x432.webp)
சூப்பர் ஸ்டாரின் ரிஷிகேஷ் பயணத்தின் போது யாராலும் சந்திக்க முடியாத ஒரு நபரை அவர் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்:
கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காத ஒருவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவர் சென்ற ரிஷிகேஷ் பயணத்தின் போது சந்தித்த அனுபவங்கள் குறித்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
அதாவது தலைவருக்கு ஆன்மீக பக்தி அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் அடிக்கடி இமயமலைக்கு செல்வது வழக்கம். அதேபோல் ரிஷிகேஷ் பயணத்தையும் மேற்கொண்டு வருவார். அவ்வாறு ஒரு முறை ரிஷிகேஷ் பயணம் செல்லும் போது 80 வயதுடைய ரிஷி ஒருவரை சந்தித்துள்ளார். அவரை இதுவரை எந்த ஒரு சாதாரண மனிதனும் பார்த்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் அதிகாரிக்கு நடந்த கொடூரம்..,கைதி போல அடைக்கப்பட்டு நடந்த கட்டாய திருமணம்! போலீசில் புகார்!!
ஆனால் அந்த குடுப்பணை தலைவருக்கு கிடைத்திருக்கிறது. ரஜினியை பார்த்த ரிஷி சைகையால் வர சொல்லி கையில் வெற்றிலையை கொடுத்து போக சொன்னாராம் . அந்த வெற்றிலையை இன்னும் ரஜினி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.தற்போது இந்த விஷயம் தான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.