கர்நாடகாவில் நவம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் அப்டேட்களை பெற..கிளிக் செய்யுங்கள்..!
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, இதுவரை கர்நாடகாவிற்கு இரண்டு லட்சம் தடுப்பூசி வந்துள்ளது. இப்போது வரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு இதுவரை 1,11,26,340 டோஸ் தடுப்பூசி வழங்கியுள்ளது. மேலும் அரசு அளித்த தடுப்பூசி தவிர கர்நாடக அரசும் நேரடியாக தடுப்பூசி கொள்முதல் செய்துள்ளதாகவும், தற்போது வரை 1,13,61,234 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளார்.
அதை தொடர்ந்து கர்நாடகத்தில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். கோவேக்சின், ஸ்புட்னிக் தடுப்பூசிகள் கர்நாடகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இதை தவிர்த்து தற்போது இந்தியாவில் பரவி வரும் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்தவும் தனி செயல்படை அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இந்தியாவில் காட்டுத்தீயாய் பரவி வரும் கோவிட்-19 இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே சிறந்த தீர்வு என்ற முறையில் அனைத்து மாநில அரசுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்தியுள்ளன. இதையடுத்து கர்நாடகாவின் சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் நவம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார்.