கர்நாடகாவில் காவலர் தனது பணியை சரியாக செய்யாத நிலையில், அம்மாநில நீதிமன்றம் அவருக்கு சாலையை சுத்தம் செய்ய வேண்டும் என்று அதிரடி தண்டனையை விதித்துள்ளது. இது சரியாக தனது பணியை செய்யாத அனைவருக்கும் ஒரு பாடமாக திகழ்ந்துள்ளது
கர்நாடகா காவலர்:
அக்டோபர் 20 அன்று குல்பர்கா பகுதியை சேர்ந்த தாராபி என்ற தாய் தனது மகனை காணவில்லை என்று காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். ஆனால் அங்குள்ள காவலர் ஒருவர் அதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மேலும் இந்த சம்பவத்திற்காக எப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை. காவல் நிலைய பதிவேட்டிழும் பதிவு செய்யவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் சுனில் டட்டா மற்றும் கிருஷ்ணா பாட் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் காவல்துறை அதிகாரி தரப்பில் ஆஜரான வக்கீல் கூறியதாவது “காவலர் தான் செய்த தப்பிற்கு அவர் சமூக பணிகளை செய்ய தயாராக உள்ளார்” என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் அதிகரித்த சிசேரியன் குழந்தைப்பேறு, குறைந்த தாய்ப்பால் ஊட்டம்!!
இதனை அடுத்து குல்பர்கா பகுதியில் உள்ள மார்க்கெட் பஜாரை அந்த காவலர் சுத்தம் செய்ய வேண்டும் என்று கர்நாடகாவின் குல்பர்கா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தவறு யார் செய்தலும் அவர்களுக்கு தண்டனை உறுதி என்று அனைவர்க்கும் உணர்த்தியுள்ளது நீதித்துறை.