அரசு ஊழியர்களே…, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த குழு அமைப்பு?? வெளியான அதிரடி அறிவிப்பு!!

0
அரசு ஊழியர்களே…, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த குழு அமைப்பு?? வெளியான அதிரடி அறிவிப்பு!!
நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வைத்த வண்ணம் உள்ளனர். அதிலும் குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தான் நீண்ட நாள் வற்புறுத்தி வருகின்றனர். இதனால் அந்தந்த மாநில அரசு இது குறித்து தொடர்ந்து பரிசீலனை செய்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக அரசு, ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 2006 ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. தற்போது இந்த குழுவை மறு சீரமைக்க முடிவு செய்துள்ளோம். அடுத்த 10 நாட்களில் மறு சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த உடன் இந்த குழு பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆலோசனை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளோம். எனவே அதன் பிறகு பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக நிச்சயம் ஏதேனும் முடிவு எடுக்கப்படும் என கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here