ஹிந்தி நடிகரான சுஷாந்த் சிங் தற்கொலையில் பல உண்மைகளை வெளியிட்டார் கங்கனா ரணாவத். மகாராஷ்டிரா அரசை விமர்சித்த இவர் மும்பையை ‘மினி பாகிஸ்தான்’ என்று கூறியது சர்ச்சையான நிலையில் இப்பொழுது அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
கங்கனா ரனாவத்:
மும்பையில் ஜூலை 14ம் தேதி ஹிந்தி நடிகரான சுஷாந்த் சிங் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக விசாரணைகள் நடந்து வரும் நிலையில் கங்கனா ரனாவத் அவர் மன உளைச்சலால் தான் தற்கொலை செய்துகொண்டார் என்று குற்றம் சாட்டினார். மேலும் பாலிவுட்டில் போதை பொருட்களில் பயன்பாடு அதிகம் எனவும் கூறியிருந்தார். இவ்வாறு அவர் பல குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.
அதனை தொடர்ந்து மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உடன் ஒப்பிட்டு பேசினார். இதற்கு சிவசேனா எம்.பி சஞ்சய் ராவுத், மும்பை அல்லது மராட்டியதை இழிவுப்படுத்துவது, அவமதிப்பது போன்றவற்றில் ஈடுபட்டால் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று பதிலடி கொடுத்தார். மேலும் வரும் 9ஆம் தேதி கங்கனா ரனாவத் மும்பை வந்து சேர்ந்தால் சிவசேனா உறுப்பினர்கள் கன்னத்தில் அறைவார்கள். அச்சமாக இருந்தால் மும்பைக்கு வர வேண்டாம். மேலும் இதற்காக கங்கனா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் சஞ்சய் ராவுத் கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி அளித்த கங்கனா ரனாவத் , நான் கட்டாயமாக 9 ஆம் தேதி மும்பைக்கு வருவேன். ‘முடிந்தால் தடுத்து பாருங்க’ என்று சாவல் விட்டுள்ளார். இதனை அடுத்து அரியானா மாநில உள்துறை அமைச்சகம் சுஷாந்த் தற்கொலை விஷயமாக பல உண்மைகளை வெளியிடுவதற்கு கங்கனா ரனாவத்திற்கு அனுமதியளிக்க வேண்டும் என கூறினார். மேலும் இமாச்சல முதல்வர் ஜெயராம் தாகூர் கங்கனாவிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
எனவே தான் கங்கனா ரனாவத்திற்கு ஒய் பிரிவி பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. அதாவது ஒய் பிரிவு பாதுகாப்பு என்பது 11க்கு மேற்பட்ட பாதுகாவலர்கள் ஒரு நாளைக்கு 3 வேளை சுழற்சிகளில் மாறி மாறி பாதுகாப்பில் ஈடுபடுவதாகும். இதனால் மும்பைக்கு வரும் கங்கனாவிற்கு அவரின் வீட்டிற்கும், அவர் வெளியே செல்லும்போதும் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.