நாம் என்றோ எடுத்த டார்ச்சுக்கே மோடி இன்று தான் வருகிறார் – கமல்ஹாசன் விமர்சனம்..!

0

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமர் மோடி நாளை (05.04.2020) அன்று இரவு 9 மணிக்கு மக்கள் அனைவரும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகள் மூலம் ஒளியேற்றுமாறு தெரிவித்து உள்ளதை மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் விமர்சனம் செய்து உள்ளார்.

கமல்ஹாசன் ட்வீட்:

இந்தியா முழுவதும் கொரோனா பரவலால் உயிர் இழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி அவர்கள் முக்கியமான அறிவிப்பை வெளியிடுவார் என அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில் நாளை (05.04.2020) அன்று இரவு 9 மணிக்கு மக்கள் அனைவரும் மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகள் மூலம் ஒளியேற்றுமாறு அவர் தெரிவித்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

ஜார்கண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர், எங்கள் மாநில வலியை மோடி இன்னும் புரிந்து கொள்ளவில்லை, உணவு சப்ளை இல்லை என கவலை தெரிவித்தார். தற்போது கமல்ஹாசன் இன்று இரவு வெளியிட்ட ட்வீட்டில், பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன்.

பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here