தமிழ்நாட்டில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும், “கலைஞர் மகளிர் திட்டம்” செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்பட உள்ளது. இதற்கான முதல் கட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வரவேற்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்காதவர்களுக்கு 2வது கட்ட விண்ணப்பங்கள் இரு தினங்களுக்கு முன்பு வரை விநியோகிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை அரசு பரிசீலித்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதில் தேர்வு செய்யப்படும் மகளிர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் மகளிர்களின் மொபைல் எண்ணுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. நிராகரிக்கப்பட்டவர்கள் தகுந்த ஆவணங்களை கொண்டு மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? வெளியான முக்கிய தகவல்!!