தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்கள், முக்கிய நிகழ்வுகள் போன்றவற்றிற்கு உள்ளூர் விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 21 ஆம் தேதி சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் ஜூன் 12ஆம் தேதி தொடங்கி, மறுநாள்( 13-ஆம் தேதி) அதிகாலையில் தர்காவை அடைகிறது. இந்த நிகழ்வை காண தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள்.
கதறும் vj பாவனா., என் கனவை நாசமாக்கியதே அவங்க தான்., ஷாக்கான ரசிகர்கள்!!
இதனால் ஜூன் 13 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்ய வருகிற ஜூன் 24 ஆம் தேதி வேலை நாளாக அறிவித்துள்ளார். அன்று அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.