அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்தை தொடர்ந்து ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் தெலுங்கானா அரசு சாலை போக்குவரத்து ஊழியர்களுக்கு, ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 4.8 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அம்மாநில TSRTC இயக்குனர் வி.சி. சஜ்ஜனார் அறிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
இந்த அறிவிப்புக்கு சாலை போக்குவரத்து ஊழியர்கள் உட்பட பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு நவராத்திரிக்கு முன்னதாக ஜூலை மாத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படலாம் என வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.
தமிழக சுற்றுலா பயணிகளே.., இந்த அருவியில் குளிக்க கட்டணம் தேவையில்லை.., வெளியான சூப்பர் நியூஸ்!!