தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் சில முக்கிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய கூடும்.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் வருகிற அக்டோபர் 7 மற்றும் 8ம் தேதி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, திண்டுக்கல் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.