சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வேலை செய்து வரும் பலரும் வார இறுதி நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல ரயிலில் முன்பதிவு செய்வது வழக்கம். ஆனால் ஒரு சில நேரங்களில் அந்த ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. அந்த வகையில் காரக்பூர் ரயில் நிலையம் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், ரயில் பாதைகள் மிகவும் சேதமடைந்துள்ளது.
இதையடுத்து சென்னை, நாகர்கோவில் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ஒரு சில ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி,
- இன்று காலை 6 மணிக்கு சென்னை சென்ட்ரலிருந்து – சாலிமர் செல்லும் கோரமண்டல் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- இன்று காலை 10:35 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூரு – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் ரத்து.
- நாளை மறுநாள் (அக்டோபர் 8) மதியம் 02.45 மணிக்கு நாகர்கோவிலிருந்து – சாலிமர் செல்லும் வாராந்திர ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இந்த 11 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்.., வானிலை மையம் எச்சரிக்கை!!