![ரயில்வே பயணிகளே..., இந்த வழித்தடங்களில் மட்டும் சிறப்பு சேவை நீட்டிப்பு..., நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! ரயில்வே பயணிகளே..., இந்த வழித்தடங்களில் மட்டும் சிறப்பு சேவை நீட்டிப்பு..., நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!](https://enewz.in/wp-content/uploads/2023/10/fff-ran-696x348.jpg)
பொது மக்களின் நலன் கருதியும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் அரசானது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக விடுமுறை நாட்களில் சில சிறப்பு ரயில்களையும், பேருந்துகளை கூடுதலாக போக்குவரத்து துறை பொது மக்களுக்காக வழங்கி வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே மதுரை – கச்சிகுடா உட்பட்ட 4 பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் சேவை தொடரும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், இதற்கான டிக்கெட் முன் பதிவுகள் இன்று (அக்டோபர் 6) இரவு 8 முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது,
- மதுரை – கச்சிகுடா அதிகாலை 5:30 மணி வாராந்திர ரயில் அக்டோபர் 18, 25, நவம்பர் 1, 8, 15, 22, 29 ம் தேதிகளிலும், தெலுங்கானா மாநிலம், காச்சிகுடா – மதுரை இரவு 8:45 மணி வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் 16, 23, 20 நவம்பர் 6, 13, 20, 27 ஆம் தேதிகளிலும் நீட்டித்து இயக்கப்பட உள்ளது.
- நாகர்கோவில் – கச்சிகுடா காலை 6:30 மணி வாராந்திர ரயில் அக்டோபர் 15, 22, 29 ம் தேதிகளிலும், நவம்பர் 5, 12, 19, 26ம் தேதிகளிலும், கச்சிகுடா – நாகர்கோவில் இரவு 7:45 மணி வாராந்திர ரயில் அக்டோபர் 13, 20, 27 நவம்பர் 3, 10, 17, 24ம் தேதிகளிலும் நீட்டித்து இயக்கப்பட உள்ளது.
சென்னை, நாகர்கோவிலிருந்து புறப்படும் இந்த ரயில் சேவை ரத்து., தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு!!!
- தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் – ராமநாதபுரம் இரவு 9:10 மணி ரயில் அக்டோபர் 11, 18, 25, நவம்பர் 1, 8, 15, 22, 29 ம் தேதிகளிலும், ராமநாதபுரம் – செகந்திராபாத் காலை 9:50 மணி ரயில் அக்டோபர் 13,20, 27, நவம்பர் 3, 10, 17, 24, டிசம்பர் 1ம் தேதிகளிலும் நீட்டித்து இயக்கப்பட இருக்கிறது.
- ஆமதாபாத் – திருச்சி காலை 9:30 மணி வாராந்திர ரயில் அக்டோபர் 12, 19, 26, நவம்பர் 2, 9, 16, 23, 30 ம் தேதிகளிலும் திருச்சி – அகமதாபாத் காலை 5:40 மணி வாரந்திர ரயில் அக்டோபர் 8, 15, 22, 29 ம் நவம்பர் 5, 12, 19, 26, டிசம்பர் 3ம் தேதிகளிலும் நீட்டித்து இயக்கப்பட இருக்கிறது.