![கண் இமைக்கும் நேரத்தில் செல்போனை நைசாக திருடிய அரை ட்ரவுசர் நபர்.., இணையத்தில் வைரலாகும் வீடியோ!! கண் இமைக்கும் நேரத்தில் செல்போனை நைசாக திருடிய அரை ட்ரவுசர் நபர்.., இணையத்தில் வைரலாகும் வீடியோ!!](https://enewz.in/wp-content/uploads/2023/10/ff-2023-10-06T151732.645-768x576.jpg)
தற்போதைய காலகட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளை என பல குற்றங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இதனை தடுக்க அரசு கடுமையான தண்டனைகளை கொடுத்த போதிலும் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று தான் வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் ஒரு நபர் இ சேவை மையத்தில் போனை திருடிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது நாகை மாவட்டம் அருகே பால்பண்ணை சேரியில் ஆனந்த் என்பவர் இ சேவை மையம் நடத்தி வந்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் இன்று வழக்கம் போல் கடையை திறந்து பணியை தொடர்ந்த போது அவருடைய மொபைலை சார்ஜ் போட்டுள்ளார். இதனை தொடர்ந்து அருகில் உள்ள கடைக்கு சென்ற போது, கண் இமைக்கும் நேரத்தில் நைசாக மொபைலை திருடி சென்றுள்ளார். இது சிசிடிவி கேமராவில் தெளிவாக ரெகார்ட் ஆகியுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.