சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா தற்போது ‘ஜேஎன்.1’ வைரஸ் உருமாறியுள்ளது. இதனால் உலக மக்கள் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். மேலும் இந்த ‘ஜேஎன்.1’ வைரஸால் பாதிக்கப்பட்டோர் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர்.
மேலும் கடந்த மாதத்தை விட இம்மாதம் ‘ஜேஎன்.1’ வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி கடந்த 8 மணி நேரத்தில் மட்டும் கேரளாவில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 159 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை 92 சதவீதமாக அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.