சமீபகாலமாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த பும்ரா, தேசிய அகாடமியில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பும்ரா:
இந்திய அணியானது, நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியை 168 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன் தொடரையும் கைப்பற்றியது. கடந்த சில ஆண்டுகளாக, தனது சொந்த மண்ணில் எந்த தொடரையும் இழக்காமல் தொடர் சாதனைகளை படைத்து வரும் இந்திய அணி, அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்து இருந்தது. மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிக்கும் விரைவில் பிசிசிஐ இந்திய அணியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் இந்தியாவின் வேக புயல் பும்ரா, சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றிருந்தார்.
ஆனால், தேசிய கிரிக்கெட் அகாடமியானது (NCA) பும்ராவை அவசரப்படுத்த வேண்டாம் என எண்ணி மீண்டும் ஓய்வினை அளித்தது. இந்நிலையில், பும்ரா NCAயில் பந்து வீச்சு பயிற்சியை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.