சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வாகன நெரிசல்களை குறைத்து மக்கள் விரைவு பயணங்களை மேற்கொள்ள மெட்ரோ ரயில் சேவை மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கேற்ப நாளுக்கு நாள் மெட்ரோ சேவையை பயன்படுத்தும் பயனாளர்களும் அதிகரித்து கொண்டே செல்கின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் சென்னையில் 5 வழித்தடங்களில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக முக்கிய இடங்களில் வாகன ஓட்டிகள் சிரமப்படாத வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடம்பாக்கம் to ஆற்காடு சாலையில் மெட்ரோ கட்டுமான பணி நடைபெற உள்ளதால் இன்று (02.02.2023) முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தொடர் கனமழையால் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!
அதாவது, ஆற்காடு முதல் கோடம்பாக்கம் செல்லும் வாகனங்கள் துரைசாமி சாலை வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வழியில் காலை, மாலை அலுவலக நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சைதாப்பேட்டையில் இருந்து முத்தாலம்மன் சாலை செல்ல 100 அடி இணைப்பு சாலையை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.