இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்த போது, பிரதமர் மோடி அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திய விதத்தை பற்றி ஜடேஜா பகிர்ந்துள்ளார்.
ஜடேஜா:
இந்தியாவின் பிரபலமான ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலம் நடைபெறுவதற்கு முன், ஐபிஎலில் பங்கு பெற உள்ள ஒவ்வொரு அணியும் தக்கவைத்து கொண்டுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, அனைத்து அணிகளும் கடந்த வாரமே தங்களது, தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில்(CSK) ஜடேஜா இருப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகம் இருந்து வந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படியே, CSK அணியில் ஜடேஜா இருந்தார். இதன் பின், ஜடேஜா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், தோனியுடன் CSK ஜெர்சியை அணிந்த படியான ஒரு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருந்தார்.
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்த போது, பிரதமர் மோடி அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திய விதத்தை பற்றி ஜடேஜா பகிர்ந்துள்ளார். அதில், தன்னை தோனி அறிமுகப்படுத்திய போது, மோடி அவர்கள், “அவன் நம்ம பையன், அவனை நல்ல பாத்துக்கோங்க” என்று கூறியிருந்தார். எவ்வளவு பெரிய அந்தஸ்தில் உள்ளவர், இவ்வாறு கூறிய போது, ஒரு வித மகிழ்ச்சியான மனநிலை உணர்ந்தேன் என்று ஜடேஜா கூறியுள்ளார்.