வாக்காளர்களுக்காக பணம் பதுக்கிவைப்பு?? திமுக வேட்பாளர் வீட்டில் குவிந்த ஐடி அதிகாரிகள்!!

0

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஐடி அதிகாரிகள் மிக தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது அந்த வகையில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் வைத்துள்ளதாக எ.வ.வேலுவின் சொந்தமான அனைத்து இடங்களுக்கும் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் எந்த முறைகேடும் நடைபெற கூடாது என்ற வகையில் தேர்தல் அதிகாரிகள், பறக்கும் பாடையினர் மற்றும் ஐடி அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முறையான ஆவணம் இன்றி கொண்டு செல்லும் பணம், நகை முதலியவற்றை பறக்கும் படையினர் மடக்கி பிடித்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் சில முக்கிய பிரமுகர்கள் வீட்டிற்கே சென்று வருமான வரித்துறையினர் அதிரடியாக ரைடு செய்து வருகின்றனர். தற்போது அந்த வகையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக கூறி எ.வ.வேலுவின் சொந்தமான அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்காக 20 வாகனத்தில் எ.வ.வேலுவின் வீட்டிற்கு வருமான வரித்துறையினர் குவிந்தனர்.

ஏப்ரல் 15 முதல் செமஸ்டர் தேர்வு – அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி!!

எ.வ.வேலுவின் வீடு, கல்லூரி, அறக்கட்டளை என அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது திருவண்ணாமலையில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் எ.வ.வேலுவின் இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஸ்டாலின் தங்கியிருந்த எ.வ.வேலுவின் கல்லூரியிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here