கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம்:
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அசுர வேகத்தில் பரவி வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதனால் தமிழக மக்கள் அனைவரும் அச்சமடைந்தனர். மேலும் தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வருகிறது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த விடுமுறை இந்த வாரம் முதல் தொடங்கியது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் அனைத்தும் இந்த மாதம் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – அவதியில் மக்கள்!!
அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமே நடைபெரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெறுவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் அரியர் மாணவர்களுக்கான தேர்வுகளும் ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரத்திற்குள் முடிக்கப்படும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.