ஐடி துறையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில், ஊழியர் குறைப்பு நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.
ஊழியர் குறைப்பு :
கொரோனா காலகட்டத்தின் போது ஐடி நிறுவனங்கள், ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதித்தது. இதனால் ஏற்பட்ட, இழப்புகளை சரி செய்ய பல்வேறு யுக்திகளை நிறுவனங்கள் செயல்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தொற்று பரவல் குறைந்ததால், மீண்டும் ஊழியர்களை அலுவலகத்திற்கு வர வைக்க சில நிறுவனங்கள் கடுமை காட்டியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால் பல ஊழியர்கள் பணிபுரிந்த நிறுவனத்தை விட்டு வேறு நிறுவனங்களுக்கு மாறினார். இது ஒரு புறம் இருக்க, கடந்த கோவிட்-19 காலகட்டத்தின் போது கூட இல்லாத வகையில், தற்போது கடந்த 2 ஆண்டுகளாக ஊழியர் குறைப்பு நடவடிக்கைகளை பல நிறுவனங்கள் செய்து வருகிறது.
தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000., ஸ்டாலின் அறிவிப்பு! நாளை முதல் வழங்க உத்தரவு!!
வருமானம் இழப்பு, புதிய முதலீட்டை ஈர்த்தல் போன்ற பல்வேறு செயல்முறைகளை காரணம் காட்டி, ஊழியர் குறைப்பு நடவடிக்கையை நிறுவனங்கள் செய்து வருகிறது. இதன் தாக்கம், ஐடி துறையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துமோ? என தொழில்துறை வல்லுனர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.