கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் தீவிரமாகியது. இதன் காரணமாக ஹமாஸ் அமைப்பினர் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல் மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் 13,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த சூழலில் இஸ்ரேலில் இருந்து பணய கைதியாக பிடித்து வைத்துள்ள 200க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது, தற்போது இந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் கூடிய விரைவில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.., வானிலை மையம் எச்சரிக்கை!!!