கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினரிடையே நடைபெற்று வரும் போர் காரணமாக காசா பகுதி மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பின்னர் கடந்த 7 தினங்களாக இரு தரப்பினரும் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் போட்டு. தாங்கள் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகளை விடுவித்து இருந்தனர்.
இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த விதிகளை மீறியதாக கூறி இஸ்ரேல் ராணுவம் மீண்டும் காசா பகுதி மீதான தாக்குதலை தொடங்கி உள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டு வரும் காசா மக்கள் கூறுகையில், “நிரந்தர போர் நிறுத்தமே நிம்மதியாக வாழ வழிவகுக்கும்.” என கண்ணீர் மல்க கூறி வருகின்றனர். இதற்கு உலக நாடுகள் சார்பில் எவ்வித நடவடிக்கை எடுப்பார்கள் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தை மிரட்ட வரும் புயல்., இந்த பகுதி மீனவர்களுக்கு தடை., அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!!!