2023 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
ஐபிஎல் அப்டேட்:
அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இப்போதிருந்தே எழ தொடங்கிவிட்டது. இதற்கு காரணம், திறமையான வீரர்களை தங்களது அணிகளுக்கு எடுத்துக் கொள்வதற்கான மினி ஏலம் முன்கூட்டிய வர இருப்பது தான்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த மினி ஏலமானது, டிசம்பர் மாதம் 23ம் தேதி கொச்சியில் நடைபெற இருக்கிறது. சமீபத்தில் தான், ஒவ்வொரு அணியும், தங்களது அணியிலிருந்து, தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டிருந்தன. இதனால், மினி ஏலத்தில் எந்த வீரர்கள் எந்தெந்த அணியில் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துவிட்டன.
சராசரி 66 வைத்தாலும் சஞ்சு சாம்சனுக்கு நோ…, பார்மில் இல்லனாலும் ரிஷப் பந்த்க்கு வாய்ப்பு!!
இந்நிலையில், இந்த மினி ஏலத்திற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த வகையில், கடந்த 2018ம் ஆண்டில் ஏலத்தை சிறப்பாக நடத்தி கொடுத்த, ஹக் எட்மீட்ஸை இந்த முறையும் நடத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, பேசிய இவர், 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தை நடத்த, பிசிசிஐ என்னை அழைத்தது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.