சமீபகாலமாக, இணையத்தில் நடந்து வரும் பண மோசடி குறித்த பரபரப்பு எச்சரிக்கை ஒன்றை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ளார்.
டிஜிபி அட்வைஸ்:
நாடு முழுவதும் டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தின் வாயிலாக, அனைத்து பண பரிமாற்றமும் ஆன்லைன் முறையில் நடந்து வருகிறது. இந்த ஆன்லைன் பண பரிவர்த்தனை முறையில் என்னதான், முன்னேற்றங்கள் வந்தாலும் இதில் மோசடி நடக்கத்தான் செய்கிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த வகையில், சமீபத்தில் நடந்த FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காண, இலவசமாக 50 GB டேட்டா வழங்கப்படுவதாக சோசியல் மீடியாவில் வதந்தி கிளம்பியது. இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள காவல்துறை, இதுபோன்ற தேவையில்லாத லிங்க்களை, ஓபன் செய்து பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநில நபர்களின் ஆதார் சேகரிப்பு – காவல்துறை அதிரடி உத்தரவு!!
இது மட்டும் அல்லாமல் , பொதுமக்கள் தங்களின் பாஸ்வேர்டு, ஓடிபி மற்றும் வங்கி கணக்கு எண் போன்ற தகவல்களை யாருக்கும் பகிர வேண்டாம் எனவும், எந்த வங்கியும் போன் கால் மூலம் இந்த தகவல்களை கேட்பதில்லை எனவும் டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.