ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாக பஞ்சாப் அணியின் கேப்டனான கே எல் ராகுல் 80 இன்னிங்ஸில் அதிக வேகமாக 3000 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.
புதிய சாதனை:
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் களத்தில், நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த போட்டியில், இரண்டு பெரிய சிக்ஸர்கள் அடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இது மட்டுமல்லாமல், தனது 80 வது ஐபிஎல் இன்னிங்ஸில் 3000 ரன்களை கடந்த முக்கிய வீரர் என்ற பட்டத்தை ராகுல் தட்டி சென்றுள்ளார்.
தனது, சக வீரர் கிறிஸ் கெயிலுக்கு பிறகு இரண்டாவது முறையாக அதிவேக சாதனையை பெற்ற நபர் என்ற பெருமையை ராகுல் அடைந்துள்ளார். இதில், கிறிஸ் கெயில் 75 இன்னிங்ஸில் 3000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையுடன் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத் தகுந்தது. இவரது, இந்த சாதனை ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்