இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானதை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளின் தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது என பிசிசிஐ தெரிவித்து உள்ளது. மார்ச் 29ம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டு உள்ளன.
70க்கும் மேல் பாதிப்பு..!
இந்தியாவில் கொரோனா வைரஸினால் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கேரளா, டெல்லி ஆகிய இடங்களில் அவசரகால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்திக் கொள்ளுமாறும் மத்திய அரசு அறிவுரை வழங்கி இருந்தது.
இந்நிலையில் மார்ச் 29-ந்தேதி தொடங்க இருந்த ஐபிஎல் 2020 சீசன் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்து உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |