இந்தியாவில் உள்நாட்டு தொடரான ஐபிஎல் போட்டி கடந்த 2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ODI உலக கோப்பை நடைபெற்றாலும், சிறப்பான முறையில் ஐபிஎல் போட்டியை நடத்தியதால் பிசிசிஐக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக இருந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தற்போது எதிர்வரும் ஐபிஎல் சீசன் எப்போது தொடங்கும் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வரும் மார்ச் மாதம் வரை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த தொடர் முடிந்த பிறகு வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஐபிஎல் தொடர் தொடங்கும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரலில் தொடங்கி இந்த தொடர் மே மாத இறுதி வாரத்தில் முடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அடக்கடவுளே.., கோமாளி பட பாணியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்., போலீசுக்கு பரந்த கோரிக்கை!!!