இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 18வது லீக் போட்டியில் சென்னை அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் முதலில் விளையாடிய சென்னை 165 ரன்கள் குவித்தது. அதன் பிறகு களம் இறங்கிய ஹைதராபாத் அணி 18.1 ஓவர் முடிவில் 166 ரன்கள் அடித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
விஜய் டிவியில் முடிவுக்கு வரும் டாப் 10 சீரியல்.., அதுக்கு பதில் இனி இந்த தொடர் தான் ஒளிபரப்பாகுமா??
இந்த நிலையில் சென்னை அணியின் தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதாவது போட்டியின் தொடக்கத்தில் நன்றாகவே ஆடினோம். மெதுவான பிட்ச்சாக இருந்தது. 170-175 தங்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார். தற்போது இவரின் கருத்து சமூக வலைதங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.