IPL தொடரின் 17வது சீசன் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ரியான் பராக் அதிரடியாக விளையாடி (84 ரன்கள்) அரைசதம் அடித்து அசத்தினார்.
இதையடுத்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 173 ரன்கள் மட்டுமே குவித்தது. இதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 44 ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடினார். இதன் மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தமிழக ரயில் பயணிகளே., நாகர்கோவில் செல்லும் இந்த ரயில்கள் எல்லாம் ரத்து? ஏப்ரல் 1ஆம் தேதி வரை!!!