டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனும், இந்தியாவின் இளம் வீரருமான ரிஷப் பண்ட் குறித்து, ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் சில கருத்துக்களை கூறியுள்ளார்.
ரிக்கி பாண்டிங்:
இந்திய அணியின் முன்னணி மற்றும் இளம் வீரரான ரிஷப் பண்ட் சமீபத்தில் பயங்கரமான கார் விபத்திற்கு உள்ளாகி இருந்தார். இதனால், இவருக்கு 3 வித அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதை அடுத்து, கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்குவதற்கு நீண்ட காலம் ஆகும் என தகவல் வெளியாகி இருந்தது. பல தீவிர சிகிச்சைக்கு பிறகு, சமீபத்தில் தான் ரிஷப் பண்ட் விரைவில் மீண்டு வருவேன் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவதற்கு இடைப்பட்ட காலத்தில், இவர் பல சர்வதேச தொடர்களை இழக்க நேரிடும். மேலும், ஐபிஎல் தொடரையும் இழக்க இருப்பதால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு புதிய கேப்டனை தேர்ந்தெடுப்பதுடன், விக்கெட் கீப்பரையும் தேட வேண்டிய நிலைக்கு அணி நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளரும் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவானுமான ரிக்கி பாண்டிங், நான் பந்தை மிகவும் நேசிக்கிறேன். அவர் மீண்டும் அணிக்கு விரைவில் திரும்புவார் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, உடல் தகுதி இல்லாவிட்டாலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு உத்வேகம் தர ரிஷப் பண்ட் வர விரும்புவதாக தெரிவித்துள்ளார்.