கொரோனா தொற்றின் வீரியம் குறைந்த நிலையில் இப்போது புது வைரஸ் ஒன்று கண்டுபிடிக்க பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஜாம்பி வைரஸ்
உலகெங்கும் பரவிய கொரோனா பெருந்தொற்று பல நாடுகளில் பல லட்சம் மக்களின் உயிரை காவுவாங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் கொரோனாவின் தாக்கம் குறைந்து மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் ஐரோப்பாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸ் மற்றும் 12 புதிய வைரஸை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதாவது ஆராய்ச்சியாளர்கள் சிலர் செர்பியாவில் உள்ள பனிப் பாறைகளுக்கு கீழே உள்ள உறைந்து கிடந்த ஏரியில் ஆய்வு செய்துள்ளனர். அப்போது பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்த நிலையில் இருந்த இந்த ஏரி தற்போது பருவநிலை மாற்றத்தால் உருக தொடங்கியுள்ளது. உருகிய நிலையில் ஆய்வு செய்தபோது இந்த வைரஸ்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவக்கூடிய அபாயம் அதிகமாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால்ஆராய்ச்சியாளர்கள் இப்போது பல்வேறு மக்கள் தொழில்நுட்ப வேலையாக ஆர்க்டிக் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். எனவே நோய் பரவும் அபாயம் இருப்பதால் மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.