தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு டிரஸ் கோட் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அலுவலக நேரத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் தங்களது ID கார்டை போட வேண்டும் என கர்நாடக மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் தாங்கள் சந்திக்க இருக்கும் அதிகாரிகளை எளிதில் அடையாளம் கண்டு வந்தனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் ஒரு சில அரசு அதிகாரிகள் அடையாள அட்டை அணியாமல் இருப்பதாக மாநில அரசுக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து கர்நாடக மாநில தலைமை செயலர் வந்திதா ஷர்மா முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது அனைத்து அரசு அதிகாரிகள், வாரிய அதிகாரிகள், கார்ப்பரேஷன் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் அலுவலக நேரத்தில் கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்.
குக் வித் கோமாளி சீசன் 4ன் பைனலுக்கு சென்ற முதல் போட்டியாளர் இவர் தான்.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!
இது தொடர்பான சோதனைகளை மேலதிகாரிகள் அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும். அப்போது அடையாள அட்டை அணியாமல் இருக்கும் பணியாளரை கண்டறிந்தால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.