நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் ஏழை எளியோர்கள் பயன்பெறும் விதமாக இலவச அரிசி, கோதுமை உள்ளிட்ட சலுகைகளை மத்திய மாநில அரசு வழங்கி வருகிறது. இந்த சலுகைகளை வசதி படைத்தவர்கள் சிலர் ரேஷன் கார்டு மூலம் வாங்கி வருவதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது. இதன் காரணமாக தகுதியில்லாதவர்கள் ரேஷன் கார்டுகளை முடக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன்படி உத்திரபிரதேசத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதாவது “வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்கள், 100 சதுர மீட்டருக்கு மேல் மனை, நான்கு சக்கரம் (அ) டிராக்டர், 5 ஏக்கர் நிலம், ஆயுத உரிமம், வருமான வரி செலுத்துபவர்கள் ஆகியோர் தகுதியில்லாதவர்களாக கருதப்படுகிறீர்கள். இவர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அந்த குடும்பத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.” என அம்மாநில அரசு வலியுறுத்தி வருகிறது.
தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு 2019 ம் ஆண்டு முதல் ஊதிய உயர்வு., ஜாக்பாட் அறிவிப்பு!!!
மறுபுறம் தகுதியானவர்களுக்கான புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த திட்டம் இதுவரை தமிழகத்தில் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.