இந்தோனேசியாவில் புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமான விமானம் – 182 பயணிகளின் நிலை??

0

இந்தோனேசியாவில் இருந்து 150 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தை காணவில்லை என்று தகவல் தற்போது கிடைத்துளளது. 10000 அடி உயரத்தை எட்டியதும் விமானம் காணாமல் போய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேஷியா விமானம்:

இந்தோனேசியாவின் சோகர்னோ-ஹட்டா விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீவிஜயா ஏர் 737 – 500 ரக விமானம் புறப்பட்டுள்ளது. இந்த விமானம் 182 பயணிகளுடன் புறப்பட்டது. மேற்கு காளிமந்தனின் மாகாண தலைநகரான பொண்டியானாக் நோக்கி பயணம் மேற்கொள்ள இருந்தது. ஜர்தாவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் விண்ணில் 10000 அடிக்கு மேலே சென்றதும் மாயமாக மறைந்துள்ளது.

நீல நிற வலை போன்ற உடையில் பார்பிடால் போல காட்சியளிக்கும் அனிகா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

Image

இந்த விமானம் தனியார் நிறுவனமான ஸ்ரீவிஜயா ஏர் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் குறித்து இன்னும் முழுமையான விவரம் தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். விமானம் மாயமான தகவலை FlightRadar24 என்ற இணையத்தளம் உறுதி செய்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதே போல் இந்த இணையதளம் மேலும் கூறியதாவது புறப்பட்ட சில நொடிகளிலேயே தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் தகவல் தொடர்ப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விமானி ஒருவர் இந்த சம்பவம் ஏற்புடையதாக இல்லை என்றும் இது கவலை அளிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here