ஜனவரி 26 இன்று இந்தியா முழுவதும் 71வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி காஷ்மீரின் லடாக் யூனியன் பிரதேசத்தில் 17 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக் கொடியுடன் இந்தோ- திபெத் எல்லை போலீஸார் குடியரசு தினத்தை கொண்டாடினர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி உள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் லடாக் மலைப் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் மைனஸ் 20 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை போலீசார் பனி படர்ந்த மலையில் மூவர்ணக் கொடியை ஏந்தியபடி வரிசையாக நடந்து சென்று குடியரசு தினவிழாவை கொண்டாடினர். பின்னர் அனைவரும் ஒரு மித்த குரலில் பாரத் மாதா கி ஜே என்றும் வந்தே மாதரம் என்றும் முழங்கினர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |