தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டதுடன் வழக்கும் பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன் இதற்கு முக்கிய புள்ளியாக செயல்பட்ட நபரை தற்போது சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் டிபிஐயில் ஆவண கிளார்க்காக பணிபுரிந்து வரும் ஓம்காந்தன் என்பவரை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இவர் விடைத்தாள்களை கொண்டு செல்லும் வழியில் அதை மாற்றி முறைகேட்டிற்கு உதவி செய்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |