கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா அணியில், அனைத்து வீரர்களும் அடுத்தடுத்த தொடரில் விளையாடி வருகின்றனர். ஆனால் 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு இன்னும் ஒரு ICC கோப்பையை கூட எடுக்காத இந்திய அணி வீரர்களுக்கு BCCI தொடர்ந்து ஓய்வு வழங்கபட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய சீனியர் வீரர்களை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பலரும் தங்களுக்கு அழுத்தம் ஏற்படுவதாக கூறி ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு அடிக்கடி ஓய்வு எடுத்துக் கொள்ளும் சீனியர் வீரர்களின் ஓய்வு குறித்து பிசிசிஐ தரப்பில் புதிய முயற்சி எடுக்கப்பட இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, இனி வரும் தொடர்களில் சீனியர் வீரர்களுக்கு உறுதியாக ஓய்வு அளிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.