ராஜஸ்தானில் இருந்து அஞ்சு (வயது 35) என்ற பெண் சமூக வலைத்தளம் மூலம் பாகிஸ்தானில் உள்ள நஸ்ருல்லா (வயது 29) என்பவரை காதலித்து வந்துள்ளார். அஞ்சுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், சமூக ஊடக காதலனை சந்திக்க 30 நாட்கள் விசாவில் பாகிஸ்தானுக்கு கிளம்பி சென்றார். அங்கு குல்ஷோ கிராமத்தில் உள்ள நஸ்ருல்லாவின் வீட்டில் அஞ்சு தங்கியிருந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனால் அங்குள்ள செய்தியாளர்கள் நஸ்ருல்லாவிடம் கேட்டபோது, “அஞ்சு என் வீட்டு பெண்களுடன் தங்கி உள்ளார். அவருக்கும் எனக்கும் இடையில் காதல் இல்லை. நட்பு மட்டும் தான் உள்ளது. விசா நாட்கள் முடிவடைந்த உடன் ஆகஸ்ட் 20ஆம் தேதி இந்தியாவுக்கு திரும்புவார்.” என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அஞ்சு பத்திரமாக திரும்புவார் என அவரது கணவர் அரவிந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் (வயது 6) மற்றும் மகள் (வயது 15) இருப்பது குறிப்பிடத்தக்கது.