ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.
ஷபாலி வர்மா மீண்டும் அதிரடி..!
இந்திய அணியின் ஷபாலி வர்மா இந்த போட்டியிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 46 ரன்கள் விளாசினார். இதன் மூலம் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 133 ரன்கள் எடுத்தது.
கடைசி ஓவரில் த்ரில் வெற்றி..!
134 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணியில் ஆரம்பம் முதலே தடுமாற்றம் நிலவியது. இதனால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ஷிகா பாண்டே வீசிய கடைசி ஓவரின் முதல் 5 பந்துகளில் 11 ரன்கள் அடிக்க போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹெலி ஜென்சன் ரன் அவுட் ஆனார். இதன் மூலம் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் உலகக்கோப்பையில் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |