மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கா?? முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை!!

0

இந்தியாவில் மீண்டும் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோடி ஆலோசனை :

இந்தியாவில் டெல்டா மற்றும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், மாநிலத்தில் பல பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கு மற்றும் பொது போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட கூடுதல் தடைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும், தற்போது ஆரம்பித்துள்ள வைரஸின் 3ம் அலை பரவல் கட்டுக்குள் வருவதற்கு எந்த சாத்தியக்கூறுகளும் இதுவரை தென்படவில்லை.

அதுபோல, நாட்டின் தினசரி பாதிப்பு லட்ச கணக்கில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை காணொலி மூலம் அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது, தடுப்பூசி செலுத்தும் பணிகளை இன்னும் துரிதப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமலாகுமா? என்ற அச்சத்தில் மக்கள் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here