இந்தியாவில் கட்டுக்கடங்காத வைரஸ் பாதிப்பு – ஒரே நாளில் 1,733 பேர் பலியான சோகம்!!

0

இந்தியாவில் வைரஸ் பாதிப்பு சற்று குறைந்து வந்தாலும், நேற்று ஒரே நாளில் 1,733 நபர்கள் பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் பலி:

இந்தியாவில் கடந்த சில தினங்களாக வைரஸ் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக 1,61,386 நபர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 4,16,30,885 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்தாலும், பலி எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உள்ளது. அந்த வகையில், நேற்று ஒரே நாளில், 1,733 நபர்கள் உயிரிழந்ததால், நாட்டில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 4,97,975 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வரை, 16,21,603 நபர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று மட்டும், சுமார் 2,81,109 நபர்கள் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். நாட்டில் குணமாகியோர் விகிதம் 94.91% ஆகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆகவும் உள்ளது. நேற்று, ஒரே நாளில் 57,42,659 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here