பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீராங்கனையான அனாஹத் சிங் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார்.
பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ்:
இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் கடந்த 4ம் தேதி முதல் பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், 15 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின், அனாஹத் சிங் பங்கு பெற்றார். இதில், இறுதிப் போட்டி வரை முன்னேறிய இவர், எகிப்தின் சோஹைலா ஹஸேமை எதிர்கொண்டார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த போட்டியின் முதல் செட்டை 11-8 என்ற கணக்கில் கைப்பற்றிய அனாஹத், 2வது செட்டை 8-11 என்ற கணக்கில் இழந்தார். இதையடுத்து, வேகம் காட்ட தொடங்கிய அனாஹத், 11-7, 11-5 என அடுத்த இரண்டு செட்டுகளை கைப்பற்றியதோடு, 3-1 என்ற வெற்றி கணக்கில் சாம்பியன் பட்டத்தையும் தட்டி சென்றார்.
T20யில் அதிக சிக்ஸர்கள் பட்டியலில் இணைந்த “மிஸ்டர் 360″…, டாப் 5 வீரர்கள் இதோ!!
இவர் இரண்டாவது முறையாக இந்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், 11 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கடந்த 2019ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதே போல, 2020ல் 13 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இறுதிப்போட்டி வரை முன்னேறி சாம்பியன் பட்டத்தை வெல்ல தவறிய இவர், 2வது இடத்தை பிடித்தார். இதன் மூலம், ஸ்குவாஷ் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற 2வது இந்திய வீரரானார். இதற்கு முன், இந்திய வீராங்கனையான ஜோஷ்னா சின்னப்பா 2003, 2019ல் வென்றிருந்தார்.