இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், தொடரை கைப்பற்றியதுடன், சாதனை பட்டியலிலும் இணைந்துள்ளது.
IND vs SL:
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, களமிறங்கிய இலங்கை அணி, 39.4 ஓவரிலேயே 215 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்தியா சார்பாக, முகமது சிராஜ் 3, குல்தீப் யாதவ் 3, உம்ரான் மாலிக் 2 மற்றும் அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, ரோஹித் சர்மா (17), சுப்மன் கில் (21), விராட் கோலி (4), ஸ்ரேயாஸ் ஐயர் (28), என சீரான இடைவெளியில் வெளியேறினர். இதையடுத்து, கே எல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில், ஹர்திக் பாண்டியா (36), அக்சர் படேல் (21) என பெவிலியன் திரும்ப, மறுபுறம் சிறப்பாக விளையாடி கே எல் ராகுல் (64*) மற்றும் குல்தீப் யாதவ் (10*) இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர். இதன் மூலம் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று இலங்கை அணிக்கு எதிரான (2-0) தொடரை கைப்பற்றியது. மேலும், இந்த வெற்றியால் இந்திய அணி, ஓர் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. அதாவது, இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி இதுவரை 95 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.