ஆசிய கோப்பையில் இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தான் தவிர்த்து இடம் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா vs பாகிஸ்தான்:
ஆசிய கண்டத்தை மையமாக கொண்டுள்ள, சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஆசிய கோப்பையானது நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 15 சீசன்களை கடந்துள்ள இந்த கோப்பையின், அடுத்த சீசன் நடப்பு வருடம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பிசிசிஐயோ, இந்த ஆசிய கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராது என முன்பு கூறியிருந்தது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு பொதுவான ஓர் இடத்தில் தான் போட்டி வைக்க வேண்டும் எனவும் பிசிசிஐ வலியுறுத்தி இருந்தது. இதனால், பிசிசிஐயானது பல்வேறு விமர்சனங்களுக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் (பிசிபி) உள்ளானது. இந்நிலையில், இரு நாட்டினருக்கும் பொதுவான இடத்தில் இந்திய அணிக்கு உரிய போட்டிகள் மட்டும் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. மற்ற போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் தான் நடைபெற கூடும்.
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உயர்த்த கோரிக்கை., அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!!
மேலும், இந்திய அணி விளையாட உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி உட்பட அனைத்து போட்டிகளும் ஓமன், இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இடங்களில் நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதன் விளைவால், பாகிஸ்தான் அணியானது இந்தியாவில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள, 50 ஓவர் உலக கோப்பை தொடரை புறக்கணிக்கக்கூடும் அல்லது, இந்தியாவை போலவே பொதுவான இடத்தில் நடத்த கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பையானது வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.