தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உயர்த்த கோரிக்கை., அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!!

0
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உயர்த்த கோரிக்கை., அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!!
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உயர்த்த கோரிக்கை., அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (CPS) எதிர்த்து பல்வேறு மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பஞ்சாப், இமாச்சல் உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அம் மாநில அரசுகள் அமல்படுத்தி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்று வரும் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் இத்திட்டம் குறித்த தகவல் வெளியிடப்படும் என அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் குடும்ப தலைவி, விவசாயி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தெரிவித்த அரசு பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த விளக்கம் எதுவும் இதுவரை அளிக்கவில்லை. இதனால் கொந்தளித்த அரசு ஊழியர்கள் “ஆட்சிக்கு வந்தால் இத்திட்டத்தை அமல்படுத்துவோம்” என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

உலக தடகள போட்டிகளில் திருநங்கைகள் விளையாட தடை?? சர்வதேச நிர்வாக அமைப்பு அறிவிப்பு!!

அந்த வகையில் சேலம் மாவட்ட அரசு ஊழியர்கள் சார்பாக பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உயர்வு, நிலுவையில் உள்ள ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here