இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 3 வது டெஸ்ட் போட்டி இன்று (பிப்ரவரி 15) சௌராட்டிர கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10, சுப்மன் கில் 0, ரஜத் படிதார் 5 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் தந்தனர்.
இவர்களை தொடர்ந்து, ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜா நிலைத்து நின்று விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த தொடங்கினர். இவர்களில், ரோஹித் சர்மா 131 ரன்களில் வெளியேற சர்பராஸ் கான் 62 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதன் மூலம், முதல் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 326 ரன்கள் குவித்து அசத்தி உள்ளது. இதில், ஜடேஜா 110* மற்றும் குல்தீப் யாதவ் 1* ரன்களுடன் களத்தில் உள்ளனர்.