இந்திய அணிக்கு, பங்களாதேஷ் அணி 2வது ஒருநாள் போட்டியில் 271 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
IND vs BAN:
பங்களாதேஷிற்கு எதிராக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில், பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, 2 வது போட்டி இன்று டாக்காவில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று காலை தொடங்கப்பட்ட இந்த போட்டியில், டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன் விளைவால், பங்களாதேஷின் தொடக்க வீரர்களான அனாமுல் ஹக் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். இவர்கள், 10 ஓவர் முடிவதற்குள் இந்தியாவின் முகமது சிராஜ் வேகத்தில் சிக்கி போல்டாகினர். இவர்களை தொடர்ந்து, நஜ்முல் ஹொசைன் 21, ஷகிப் அல் ஹசன் 8, முஷ்பிகுர் ரஹீம் 12, அஃபிஃப் ஹொசைன் (0) என அடுத்தடுத்து வெளியேறினார். இதனால், பங்களாதேஷ் அணி 18.6 ஓவரிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது.
டாப் 5 இடத்தை தக்க வைத்த ரிஷப் பந்த்…, டெஸ்ட் தொடருக்கு மட்டும் தான் சரிப்பட்டு வருவாரோ??
இதையடுத்து, ஆல்ரௌண்டரான மெஹிதி ஹசன் (100*) மற்றும் மஹ்முதுல்லாஹ் (77) அதிரடியாக விளையாடி, அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன் விளைவால், பங்களாதேஷ் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்தியா சார்பாக, வாஷிங்டன் சுந்தர் (3), முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். இந்த இலக்கை துரத்தி இந்திய அணி விளையாடி வருகிறது.