கிராமங்கள் முதல் பெரு நகரங்கள் வரை பசும் பாலினை பதப்படுத்தி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பாக்கெட் பால், நெய், தயிர் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் தற்போது மக்கள் தொகை வளர்ச்சியாலும் பசுமாடு பராமரிப்பு குறைவதாலும் மாநிலங்கள் தோறும் பால் தட்டுப்பாடு உருவாகி வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனால் தமிழ்நாடு அரசால் மக்களுக்கு பால் விற்பனை செய்து வரும் ஆவின் நிறுவனம் சமீபத்தில் விற்பனை விலையை உயர்த்தியது. இதையடுத்து கடந்த ஆண்டு மட்டும் 4 முறை விலை உயர்த்திய தனியார் பால் நிறுவனம் தற்போது மீண்டும் பால் மற்றும் தயிர் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி இன்று முதல் அமல்படுத்தியுள்ளனர்.
ஏற்கனவே காய்கறி, மளிகை விலை ஏற்றத்தை சமாளித்து வரும் பொதுமக்கள் பால் விலை உயர்வை கண்டித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் தனியார் நிறுவனத்தின் பால் விற்பனை விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கைகளும் வலுத்து வருகிறது.