தமிழகத்தில் உள்ள வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு அவ்வப்போது பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் புதிதாக பதிவு செய்யும் வாகனங்களுக்கு பதிவு சான்று, கனரக வாகனங்களுக்கு தகுதி சான்று ஆகியவற்றை பெற வாகன உரிமையாளர்கள் நேரடியாக அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலே பெற்றுக் கொள்ளலாம் என சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்போது கூட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கனரக வாகன உரிமையாளர்கள் தகுதி சான்று, பதிவு சான்றை வட்டார அலுவலகத்தில் பெற்று கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் பெரும்பாலானோர் தங்களது தொழிலை விட்டு இதற்காக நாள் முழுக்க வட்டார அலுவலகத்தில் காத்துக் கொண்டிருப்பது சிரமமான ஒன்றாகும். இதனால் மோட்டார் வாகன சட்டம் 470 ன் படி பதிவு மற்றும் தகுதி சான்றை பழைய நடைமுறையில் வழங்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைப்பதாக பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு தான் இதற்கான முடிவை விரைவில் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சந்திராயன் 3 நிலவில் லேண்ட் ஆவதை நேரடியாக பார்க்க வேண்டுமா? Live வீடியோ உள்ளே!!