நிலவின் தென்துருவ பகுதியை முதன் முறையாக ஆராய்ச்சி செய்ய இந்தியாவின் இஸ்ரோ “சந்திராயன் 3” விண்கலத்தை கடந்த மாதம் விண்ணில் அனுப்பியது. இந்த விண்கலத்தின் லேண்டரை இன்று (ஆகஸ்ட் 23) மாலை 05.47 மணியளவில் நிலவுப்பகுதியில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளனர். அதன்படி இந்த செயல்முறை மாலை 06.04 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் ISRO லைவ் வீடியோவை வெளியிட்டுள்ளது.